மலர்களின் மருத்துவ குணங்கள்- Flowers And Their Uses


  • மலர்களின் மணம் மனதிற்கு இதம் அளிப்பது மட்டுமின்றி உடல்நலத்திற்கும் நன்மை பயக்கக் கூடியது என்பதை மருத்துவ விஞ்ஞானிகள் எல்லோரும் கொண்டிருக்கிறார்கள் தமிழ் வைத்தியத்தில் மலர்களின் பங்கு பழைய காலம் முதலே அதிகமாக இருந்து வருகிறது  மருந்தாக பயன்படும் சில மலர்களின் மருத்துவ குணங்களை தெரிந்துகொள்வோமா
  •  அகத்திப்பூ அகத்திப்பூவை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர 6 முதல் 7 நாட்களிலேயே உடல் சூடு பித்த சூடு போன்றவை தீர்ந்துவிடும்
  •  ஆவாரம் பூ ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் பூவாகும் ஆவாரம்பூவை உலர்த்தி ஒரு வேளைக்கு 15 கிராம் எடுத்து நீரில் போட்டு கசாயமாக்கி பால் சர்க்கரை சேர்த்து குடித்துவர உடல் சூடு நீரிழிவு நீர்கடுப்பு போன்ற நோய் தீரும் மேலும் ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் போகும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும் 
  • இலுப்பை பூ இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும் மேலும் இது தாகத்தை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது
  •  நெல்லிப்பூ உடல் குளிர்ச்சி உண்டாக்கும் நெல்லிப்பூ விழுதி இலை வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும் பேதிக்கு சாப்பிடவும் மலச்சிக்கல் நீங்கவும் நெல்லிப்பூ சிறந்த மருந்தாகும் 
  • செம்பருத்திப்பூ இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் கஷ்டப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு நன்றாக சுண்டக் காய்ச்சி காலையும் மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்  உடல் குளிர்ச்சிக்கு மிகவும் ஏற்றது 
  • முருங்கைப்பூ ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது கண்பார்வை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்து

  •  ரோஜா பூ இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும் ரத்த விருத்திக்கும் துணை செய்யக் கூடியது கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இந்த மலருக்கு உண்டு காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உடையது கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது
  •  மகிழம்பூ மகிழம்பூவின் மணம் கண்நோய் தலைவலி தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும் ஜாதிப்பூ இந்த பூவை கண்களில் ஒற்றி வர கண் வலி குணமாகும் உடலுக்கு குளிர்ச்சி உண்டாக்கக்கூடியது 
  • தாழம்பூ இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும் 
  • கருஞ்செம்பை பூ இந்தப் பூவையும் நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும் தலை பாரம் தலை வலி கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும் 
  • குங்குமப்பூ கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை தாம்பூலத்துடன் அல்லது இரவு உறங்கச் செல்லும் போது பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான பிணிகள் அணுகாமல் காக்கும் இது தவிர பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் பயன்படுகிறது 

கருத்துகள்